பாதாள உலக தாதா மாக்கந்துர மதுஷ் துப்பாக்கி சூட்டுக்குப் பலி
பிரபல பாதாள உலக புள்ளி மாக்கந்துர மதுஷ் குழுவினருக்கும் பொலிஸாருக்கும்மிடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி அவர் உயிரிழந்தார்.
மாளிகாவத்தை வீட்டுத் தொடர்மாடித் திட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. இங்கு நடத்தப்பட்ட தேடுதலில் 22 கிலோ ஹெரோயின் , மோட்டார் சைக்கிள்கள் , பிஸ்டல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் இரண்டு போலிஸ் அதிகாரிகளும் காயமடைந்தனர்.