முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைது!
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பகுதியில் வைத்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019இல் இடம்பெற்ற அரச நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட அவர் கடந்த 5நாட்களாக காவல்துறையால் தேடப்பட்டு வந்தார்.
இந்தநிலையிலேயே இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை றிசாட் பதியுதீன் நாளை 20ஆம் திகதியின் பின்னர் பகிரங்கமாக தோன்றுவார் என அவருடைய கட்சி நேற்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.