இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா!
கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 87 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (19) இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது.
இதன்படி இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 5,625 ஆகும்.