தொழிற்சாலையில் பணிபுரியும் 15 ஆயிரம் ஊழியர்களுக்கு PCR பரிசோதனை!
இலங்கை முதலீட்டாளர் சபையின் கீழுள்ள கைத்தொழிற்சாலைகளில் இதுவரையில் 15,000 இற்கு அதிகமானவர்கள் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.வி சானக தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் முதலீட்டாளர் சபையின் கீழுள்ள அனைத்து கைத்தொழிற்சாலைகளிலும் குறித்த பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா அவதானம் ஏற்படின் அதற்கு முகங்கொடுக்க இலங்கை முதலீட்டாளர் சபை தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.