மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டு திருடிய திருடன்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சுமார் 65,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் 5,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்ற நபர் ஒருவர் தான் திருடியதற்காக மன்னிப்புக் கடிதம் ஒன்றை அந்த கடையில் விட்டுச் சென்றுள்ளார்.

“என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு பசிக்கிறது. உங்களுக்கு இது ஒருநாள் வருவாய்தான். ஆனால் என் குடும்பத்தின் மூன்று மாத வருவாய்க்கு இது சமம். மீண்டும் ஒரு முறை என்னை மன்னித்துவிடுங்கள்,” என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

இந்த திருட்டு உசிலம்பட்டி – மதுரை சாலையில் உள்ள ஒரு கடையில் நிகழ்ந்துள்ளது என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *