அரசாங்க தரப்பு உறுப்பினர்களுடன் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்!
வவுனியா மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் அரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வில்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
பிரதம அதிதியாக உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ச கலந்து கொண்ட இந்நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் திலீபன் மாகாண ஆளுனர்களான திருமதி சார்ள்ஸ், மஹிபால ஹேரத், அநுராதா யகம்பத் அமைச்சின் செயலாளரான கமல் குணரட்ன உட்பட பல அதிதிகள் கலந்து கொண்டனர்.