தைத்த ஆடைகள் இறக்குமதிக்குத் தடை?
அடுத்த ஆண்டு முதல் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு தைத்த ஆடைகள் இறக்குமதி செய்வதனை முற்றாக தடை விதிப்பதற்கு எதிர்பார்ப்பதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மூட்டுகளில் ஏற்படும் வலியை என்றென்றும் மறந்து விடுங்கள்!
அதிகமாக கற்கவும்→
தைத்த ரெடிமேட் ஆடைகளை இறக்குமதிக்கு தடை விதிப்பதுடன், அவற்றை உள்நாட்டில் தான் தைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இதன்மூலம் உள்நாட்டில் அந்த தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்மை ஏற்படும் என்று அமைச்சர் கூறினார்.
அதேபோல் எதிர்வரும் ஆண்டுகளில் பல்வேறு வகையான பொருட்களுக்கு தடை விதிக்க எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.