தமிழகத்தில் அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீடிப்பு!
அக்டோபர் 31-ம் திகதி வரை தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை நீடிக்கும். ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வாரச் சந்தைகள் மட்டும் உரிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது என கூறியுள்ளது.