மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது!

பொகவந்தலாவ தோட்ட பகுதி ஒன்றில் 15 வயது மகள் கர்ப்பம் தரித்த சம்பவம் தொடர்பில் தந்தையை நேற்று (25) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமி வயிற்றுவலி காரணமாக பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் , பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா, கிழங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பரிசோதனைக்கு ஈடுபடுத்தபட்ட போதே குறித்த சிறுமி கர்ப்பம் தரித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .
இதையடுத்து, பொகவந்தலாவ பொலிஸாருக்கு வைத்தியசாலை நிர்வாகத்தால் தகவல் வழங்கப்பட்டது.
இதற்கு அமைய சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சந்தேகநபரான தந்தையை  ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *