20ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு எதிரணி 20 எம்.பிக்கள் ஆதரவு!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பதற்காக எதிரணியைச்சேர்ந்த 20 எம்.பிக்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் திருத்தியமைக்கப்படும். அது தொடர்பில் எதிர்க்கட்சிகள் திருத்தங்களை முன்வைக்கலாம். அதனைவிடுத்து போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பொருத்தமற்ற நடவடிக்கையாகும்.
இன்று எதிரணி பக்கம் இருப்பவர்களில் 20 பேர் ’20’ ஐ ஆதரிக்கவுள்ளனர். அதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. பெயர் விபரங்களை வெளியிடவிரும்பவில்லை.” -என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *