இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை திடீர் உயர்வு!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிகை மூவாயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது.
இன்றுமட்டும் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி, கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களாவர்.