ஸ்ரீலங்காவில் ஏற்படவுள்ள புரட்சி – கோட்டாபயவின் உத்தரவு

பெரும்போகத்திற்கு அவசியமான உரத்தை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

பசளை உற்பத்தி மற்றும் விநியோகங்கள், இரசாயன பசளைகள் மற்றும் கிருமிநாசினி பயன்பாட்டு ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

அரசாங்கம் எதிர்வரும் பெரும்போகத்தில் இந்நாட்டு விவசாய வரலாற்றில் பயிர்ச் செய்கையில் புரட்சி ஒன்றை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றது.

கைவிடப்பட்டுள்ள காணிகள் உள்ளிட்ட பரந்தளவிலான பயிர் நிலங்களில் பல தசாப்தங்களின் பின்னர் நெல் உட்பட பல பயிரினங்களை பயிரிடுவதற்கு விவசாயிகள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

பெருந்தோட்டங்களுக்கும் விவசாயிகளுக்கும் அவசியமான உரத்தை உரிய அளவில், உரிய நேரத்தில், உயர் தரத்துடன் வழங்க வேண்டும்.

இவ்வருடத்தில் இறக்குமதி செய்யப்பட்ட உரத்திற்கு உரிய வகையில் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

நனோ தொழிநுட்பத்தை பயன்படுத்தி புதிய உர வகைகளின் உற்பத்தி தொடர்பாகவும் ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அவசியமான முதலீடுகளை கமத்தொழில் அமைச்சு வழங்கும். ஆகவே உர உற்பத்தியை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *