இந்தியாவை புரட்டிப் போடும் கொரோனா ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு பாதிப்பு!

நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 70 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில்  கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 90,632 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41,13,811 ஆக உயர்ந்தது.
* புதிதாக 1,065 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 70,626 ஆக உயர்ந்தது.
.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 73,642 பேர் குணமடைந்துள்ளனர்;
.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 31,80,865 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8,62,320 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
*குணமடைந்தோர் விகிதம் 77.23% ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் விகிதம் 1.73% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 10,92,654 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 4,88,31,145 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *