தேர்தலில் தோல்வி அடைந்த பலர் மாகாண சபைத் தேர்தலில் போட்டி!

2021 முற்பகுதியில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும்,அரசியல் வாரிசுகளும் போட்டியிடவுள்ளனர் என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட மேலும் சில கட்சிகளின் சார்பிலேயே வாரிசுகள் களமிறங்குகின்றனர் எனவும் தற்போதிருந்தே அவர்கள் தேர்தலுக்கு தயாராகிவருகின்றனர் எனவும் தெரியவருகின்றது.

மஹிந்த அணியில் போட்டியிட்டு ஊவா மாகாணசபைக்கு தெரிவாகியிருந்த முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவின் மகன் இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஊவாவில் போட்டியிடவுள்ளார்.

அமரர் சந்திரசேகரனின் மகள் அனுசா சந்திரசேகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். இராஜரட்னத்தின் மகன் ஜனா ஆகியோர் மத்திய மாகாணத்தில் போட்டியிடவுள்ளனர். அதேபோல் அரசியல் பிரமுகர்களின் உறவினர்களும் போட்டியிடுகின்றனர்.

அதேவேளை பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முக்கிய அரசியல் பிரமுகர்களும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *