கூட்டமைப்புக்குள் மோதல்!பங்காளிக் கட்சிகள் வெளியேறும் அறிகுறி!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியும் கொறடா பதவியும் ரெலோ மற்றும் புளொட் ஆகிய பங்களிக்கட்சிகளுக்கு தரப்படாமல் அந்தப் பதவிகள் மீளவும் சுமந்திரனுக்கும் சிறி தரனுக்கும் வழங்கப்படுமாக இருந்தால் இரண்டு கட்சிகளும் (ரெலோ, புளொட்) நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கவோ அல்லது விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் அணிகளுடன் இணையவோ வாய்ப்புள்ளது.

– இவ்வாறு புளொட் கட்சியின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன்மற்றும் ரெலோவின் லண்டன் மற்றும் தலைமைக்குழு உறுப்பினர் சாம் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறியதாவது,

இலங்கைத் தமிழரசுக்கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்தி தன்னை வளர்த்து வருகின்றது.எனவே, இலங்கை தமிழரசுக் கட்சியின் தான்தோன்றித்தனமான முடிவுகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுக்குக் காரணமாகும்.

சுமந்திரனின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே தற்போதைய பாரிய பின்னடைவுக்குக் காரணம்.

எனவே, கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியும் கொறடா பதவியும் ரெலோ மற்றும் புளொட்டுக்குத் தரப்படாமல் மீளவும் சுமந்திரனுக்கு, சிறிதரனுக்கும் வழங்கப்படுமாக இருந்தால் இரண்டு கட்சிகளும் (ரெலோ, புளொட்) நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கவோ அல்லது விக்கி னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார்
அணிகளுடன் இணையவோ வாய்ப்புள்ளது – என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *