ரணில் மீது இன்று விசாரணை!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகவுள்ளார்.
இதற்கான அழைப்பு ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன் ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் இடம்பெற்ற போது சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்த சாகல ரத்நாயக்கவுக்கும் இன்று ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.