எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த 5ம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 3 தினங்களாக எஸ்.பி.பி.-யின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது அவர் சீராக இருப்பதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *