கொரோனாவை தடுக்க ஆறு வகை தடுப்பூசிகள்!

உலக நாடுகளில் இதுவரை ஆறு வகையிலான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதன்படி பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளே அங்கிகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளன.

சர்வதேச ரீதியாக கொரோனா தொற்றை தடுப்பதற்கான பொருத்தமான தடுப்பூசியினை தயாரிக்கும் நடவடிக்கைகளில் உலக வல்லசுகள் தொடர்ந்தும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

பிரித்தானியாவினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றிற்கு அமைய இரண்டு வகையிலான 36 கோடியே 20 லட்சம் தடுப்பூசிகள் அடுத்த வருடம் நடுப்பகுதியில் தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகள் முன்னுரிமை அடிப்படையில், சுகாதார மற்றும் சமூக பணியாளர்கள், சிறுபான்மை சமூகத்தவர்கள், கடுமையான உடல்நல குறைவை கொண்டவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *