இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனாவால் உயிரிழப்பு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான்(73) கொரோனாவால் உயிரிழந்தார். அரியானா மாநிலத்தின் குருகிராம் மருத்துவமனையில் கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுனான் சிகிச்சை பெற்று வந்தார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் மந்திரியாகவும் உள்ளார். கடந்த ஜூலை மாதம் 12ந்தேதி நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
எனினும், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அரியானாவின் குருகிராமில் உள்ள மேதந்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பல உறுப்புகள் பாதிப்படைந்து இருந்தன. இதனால் அவருக்கு வென்டிலேட்டர் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சேத்தனின் உடல்நிலை மோசமடைந்து உள்ளது என அவருக்கு நெருங்கிய வட்டாரம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மருத்துவமனையில் அளித்த சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானர். அவரது மறைவுக்கு பா.ஜ.க. தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.