ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மைத்திரி அழித்து விட்டாராம்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை எண்ணி அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. மைத்திரிபால சிறிசேன மோசமான முறையில் கட்சியை அழித்துவிட்டாரென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எங்கே என நான் தேடி வருகிறேன். கடந்த ஆண்டு சிறிசேன இதை அழித்துவிட்டார். கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை.

ராஜபக்ஷவின் அரசியலை நான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இருப்பினும் அவர் சக்திமிக்க தலைவராவார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இப்போது கேவலமான முறையில் சில அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. கட்சியின் தலைவருக்கு கூட எதுவும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *