ஆட்டிப்போட்ட அமைச்சுப்பதவிகள் நடக்கபோவது என்ன?
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சு பதவி எதுவும் வழங்கப்படவில்லை.
அத்துடன் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, விஜயதாச ராஜபக்ச ஆகியோரும் அமைச்சரவையில் இடம் வழங்க்கப்படவில்லை.
மஹிந்த ஆட்சியிலும் தேசிய அரசாங்கத்திலும் அமைச்சுப் பதவிகளை வகித்த சுசில் பிரேமஜயந்த, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை. இராஜாங்க அமைச்சு பதவிகள்கூட அவர்களுக்கு கையளிக்கப்படவில்லை.
மொட்டு கட்சியில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற் றரஞ்சித் சியம்பலாபிட்டியவும் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
மேலும பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதாவுல்லாவுக்கும் அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை.
சந்திம வீரக்கொடிக்கு அமைச்சு பதவி கிடைக்காதபோதிலும் அவர் பிரதி சபாநாயகராக நியமிக்கப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.