ரயிலுடன் மோதி கார் கோர விபத்து ஒருவர் ஸ்தலத்தில் பலி!
பெலியத்தையில் இருந்து மருதானை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில் மீது வெலிகம பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட காரினை மோதி தூக்கி வீசியதால் இதனை ஓட்டிச் சென்ற சாரதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.
சமிக்ஞை விளக்கு எச்சரிக்கை செய்தபோதும் அவசரமாக கடவையினை கடந்தனால் இவ் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தினால் சமிக்ஞை கம்பம் என்பன சேதமடைந்துள்ளன.