நடிகர் சுஷாந்த் மனேஜரின் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்!

பாலிவுட் நடிகர் சுஷாந்தின் தற்கொலை ஒருபுறம் நீங்காத மர்மமாக இருந்துவரும் நிலையில், அவரது மேனேஜர் திஷாவின் தற்கொலையில் நாளுக்கு நாள் அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இருவரின் தற்கொலைகளுக்கு எந்த சம்பந்தம் இல்லை என்று கூறப்பட்டாலும் சில குழப்பங்களும் நிலவி வருகின்றது.
கடந்த ஜுன் மாதம் 9ம் திகதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த திஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த அறிக்கையில் மர்ம உறுப்பில் பல காயங்கள் இருப்பது தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திஷாவின் தந்தை தனது மகள் தற்கொலை செய்யவில்லை அவரை வன்கொடுமை செய்து யாரோ மாடியிலிருந்து தள்ளி கொலை செய்துள்ளதாகவும், சுஷாந்தின் காதலி ரியா மீது சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சுஷாந்தை இறப்பதற்கு முதல் அவரை சந்தித்ததாகவும், உடலும், மனமும் சோர்ந்து போயிருந்தார் என்று அவரது காதலி ரியா கூறியுள்ளார்.
இதற்கு திஷாவின் தந்தை இவ்வாறு இருந்தவரை ரியா ஏன் தனியாக விட்டுச்சென்றார் என்றும், எனது மகள் இறந்து ஒரு வாரத்தில் சுஷாந்த் இறப்பதற்கு காரணம் என்ன என்றும் கேட்டுள்ள திஷாவின் தந்தை சதிஷ் புகார் கொடுத்துள்ளதையடுத்து திஷாவின் வழக்கும் தற்போது வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *