லெபனான் வெடிப்பு சம்பவத்தில் இலங்கையர்கள் பலர் காயம்!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில்  காயமடைந்துள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 14  ஆக அதிகரித்துள்ளது.
காயமடைந்துள்ள இலங்கையர்கள்  லெபனானில் உள்ள வைத்தியசாலைகளில்  சிகிச்சைப்பெற்றுவருவதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளார்.
அவர்களுள் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில்  உள்ள ஆயுதக் களஞ்சியசாலை ஒன்றில்  கடந்த 4 ஆம் திகதி ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ள நிலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

லெபனானில்  சுமார் 25  ஆயிரம் இலங்கையர்கள் வாழந்து வருவதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.
வெடிப்பு சம்பவத்தில் பெய்ரூட்டில் உள்ள  இலங்கை தூதரகத்திற்கு சேதம் ஏற்பட்டதாகவும்  எவ்வாறாயினும் தூதரக பணியாளர்கள் எவருக்கும்  காயம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை அடுத்து லெபனானில்  மூன்று நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கட்டதுடன் இரண்டுவார  காலத்திற்கு  அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே  லெபனானனில் உள்ள   இலங்கையர்கள் தொடர்பான விபரங்களை பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தினை தொடர்பு கொள்வதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 00 96  1 5 76  95  85 என்ற தொலைபேசி இலக்கங்கள்  ஊடாக  லெபனானில் தங்கியுள்ள இலங்கையர்கள்  தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை லெபனான் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உட்பட லெபனான் மக்களுக்கு இலங்கை அரசாங்கம்  இரங்கல் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ லெபனான் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள இரங்கல்  செய்தியில்  இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது
இந்த சம்பவத்தில் சுமார் 137 பேர் உயிரிழந்துள்ள நிலையில்  5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை லெனனானில் சுமார் 25 ஆயிரம் இலங்கையர்கள் வசித்துவருவதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *