காலி மாத்தறை மாவட்டங்களில் மொட்டு கட்சி அமோக வெற்றி!

பொதுத்தேர்தலில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி கைப்பற்றியுள்ளது.

இதன்படி மொட்டு கட்சி மாத்தறை மாவட்டத்தில் 352,217 வாக்குகளைப்பெற்று 6 ஆசனங்களையும்,  ஐக்கிய மக்கள் சக்தி 72,740 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சுனில் ஹந்துனெத்தில் தோல்வியடைந்துள்ளார். அவர் வெற்றிபெறுவார் என பலரும் எதிர்ப்பார்த்தனர்.

காலி மாவட்டத்தில் 430, 334 வாக்குகளைப் பெற்று மொட்டு கட்சி 7 ஆசனங்களையும், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 456 வாக்குகளைப்பெற்று ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களையும் வென்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *