பாபர் மசூதி போராட்டம் கடந்து வந்த பாதை!

கி.பி.1526 – முதல் பானிபட்போர் டெல்லி க்குஅருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் டெல்லியை ஆட்சி செய்த இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெற்று முகலாயப் பேரரசின் தலைவராக அரியணை ஏறினார்.

கி.பி.1528 – பாபரின் தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார். அங்கு முழுமை அடையாமல் கிடந்த மசூதியைக் கட்டி முடித்து அதற்கு பாபரின் பெயரை சூட்டுகிறார். 1524ல் இப்ராஹிம் லோடி டெல்-யை ஆண்ட பொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப் பட்டிருந்தது.

கி.பி.1853 –
முதல் முறையாக பாபர் மசூதி நிலம் தொடர்பான சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்பட்டது. இந்து முஸ்லிம்களுக்கு இடையே நடந்த மோதலில் 75 பேர் கொல்லப்பட்டனர்.

கி.பி.1855 – பாபர் மசூதியின் ஒரு பகுதி நிலம், ராம பக்தர்கள் என கூறிக் கொண்ட ஒரு கூட்டத்தாரால் ஆக்கிரமிக்கப்பட்டது.

கி.பி.1857 – முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாவின் தலைமையில் நடந்தது. இந்துக்களும், முஸ்லீம்களும், சீக்கியர்களும் ஓரணியில் திரண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள்.

நிலைகுலைந்த ஆங்கிலேயர்கள் அப்போராட்டத்தை ஒடுக்கினாலும், இனி தாங்கள் தொடர்ந்து இந்தியாவை ஆள வேண்டும் என்றால் இந்துக்கள் முஸ்லீம்களுக்கிடையே குரோதத்தை – பிரித்தாளும் கொள்கையை வளர்த்தெடுக்க வேண்டுமென்று சதித்திட்டம் போட்டார்கள். அதற்கு அவர்கள் உடனடியாக எடுத்துக் கொண்ட ஆயுதம் தான் அயோத்தி – பாபர் மசூதி தொடர்பான வரலாற்றுத் திரிபுகள்.

அதே வருடம் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பாபர் மசூதி நிலத்தில் “ராம்சபுத்ரா’ எனும் பூஜை செய்யும் திண்ணை உருவாக்கப்பட்டு பிரச்சினைத் தீவிரமடையச் செய்தார்கள் .

கி.பி.1859 – ஆக்கிரமிக்கப்பட்ட இப்பகுதிக்கும், பாபர் மசூதிக்கு க்கும் இடையில் ஒரு தடுப்பு அமைக்கப்பட்டு இரு தரப்பினரும் வழிபாடு நடத்திட ஆங்கிலேய நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இது தான் பிற்காலத்தில் நிகழ்ந்திட்ட துயரங்களுக்கு முன்னோட்டமாகும்.

கி.பி.1931 – அயோத்தியில் வகுப்புக் கலவரம் நடக்கிறது. அப்போது பாபர் மசூதியின் உண்மைகளைக் கூறும் கல்வெட்டுத் திட்டமிட்டு பெயர்த் தெடுக்கப்பட்டது.

கி.பி.1947 – இந்தியா விடுதலை அடைந்தது.

கி.பி.1949 – டிசம்பர் மாதம் 22-23 தேதிகளின்
நள்ளிரவில் மசூதியின் கதவு பல வந்தமாக உடைக்கப்பட்டு குரு அபிராமி தாஸ் என்ற ஹிந்து சாமியார் மசூதியின் உள்ளே நுழைந்து ராமர், சீதை, லட்சுமணன் சிலைகள் மிம்பரில் வைக்கப்பட்டது.

அது வரை இரவில் இஷா தொழுகை நடத்தி விட்டு அதிகாலை வேலையின் சுப்ஹு தொழுகைக்கு மீண்டும் பள்ளிக்கு வந்த முஸ்லீம்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்கள். புகார் பதிவு செய்யப்பட்டது.

அன்றையப் பிரதமர் நேருவுக்கு தகவல் தெரிந்து உடனடியாக சிலைகளை அகற்றச் சொன்னார் . அன்றைய உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அன்றைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும் பிரச்சினையின் தீவிரத்தை உணரவில்லை.

அயோத்தி நகரின் துணை ஆணையர் கே.கே.நய்யார், பிரதமர் நேருவின் உத்தரவைப் பொருட்படுத்தாமல், பள்ளிவாசலை இழுத்துப் பூட்டி அதை “சர்ச்சைக்குரியப்பகுதி” எனஅறித்தார்.
கி.பி.1949 – இரு தரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள்.

கி.பி.1959 – நிர்மோகி அகோரா என்கிற துறவியர் அமைப்பு, இது எங்களுக்குச் சொந்தமான இடம் என்று வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்கிறது.

கி.பி.1981 – சுன்னி வக்புவாரியம், இது தங்களுக்குச் சொந்தமான இடம் என்று நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

கி.பி.1984 – அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில் இராமர் கோயில் கட்டுவோம் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவித்து பதற்றத்தை உருவாக்கினார்கள்.

கி.பி.1986 – பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவை முஸ்லீம்கள் தொடங்குகின்றனர். அதே வருடம் அன்றைய காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியில், மசூதிக்குள் வைக்கப்பட்ட சட்ட விரோத சிலையை பொது மக்கள் பூஜை செய்ய உள்ளூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

கி.பி.1989 -ம் ஆண்டு அயோத்தி விவகாரத்தில் ராமர் சிலையும் ஒரு மனுதாரராக சேர்க்கப்பட்டது. ராமரின் பாதுகாப்பாளராக முன்னாள் நீதிபதி தேவகி நந்தன் மற்றும் திருலோக்நாத் பாண்டே இணைந்து கொண்டார்கள்.

கி.பி.1989 -ம் ஆண்டு இந்துக்கள் வழிபட அலகாபாத் நீதிமன்றம் சட்டப்பூர்வ அனுமதி வழங்கியது.

கி.பி.1989 – விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், பள்ளிவாசலுக்கு அருகில் அடிக்கல் நாட்டப்பட்டு பிரச்சினைத் தீவிரப்படுத்தப்பட்டது.

கி.பி.1990 – முலாயம் சிங் யாதவ் உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்த போது வன்முறையாளர்கள் மசூதிக்கு அருகே சேதத்தை ஏற்படுத்தினார்கள். துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது.

உடனடியாக அத்வானி, குஜராத்தில் சோமநாதபுரம் ஆலயத்திலிருந்து அயோத்தி வரை ரத யாத்திரையை நடத்தி நாடெங்கிலும் பீதியை உண்டாக்கினார்.

ஆனால் அவரது ரத யாத்திரை பீகார் மாநிலத்துக்குள் நுழைந்த போது அன்றைய முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அத்வானியைத் துணிச்சலோடு கைது செய்தார். அன்றைய இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் இதனால் மத்தியில் ஆட்சியை இழந்தார்.

கி.பி.1992 – டிசம்பர் 6 – நாடெங்கிலும் திரட்டப்பட்ட மதவெறி பிடித்த, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட 1 ,50 ,000 அதிகமான வன்முறைக்கூட்டம் பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கினார்கள்.

ஊர்களிலும் நகரங்களிலும் இந்து முஸ்லீம் மக்களால் கலவரங்கள் வெடித்தன. அதில் 2000 க்கும் அதிகமான மக்கள் இறந்தனர், அதில் அநேகர் முஸ்லிம்களே!

இந்திய அரசு இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணத் தடுமாறியது.முன்னரே திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தியவர்களைக் குற்றம் கூறியது.

1983 களில் VHP ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று முன்னெடுத்த போது ஏற்பட்ட கலவரங்களில் இறந்தவர்கள் 500 க்கும் மேற்பட்டவர்கள்.
அத்வானி ரத யாத்திரை தொடங்கிய போது செப்டம்பர் 1 முதல் நவம்பர் 20 வரை நடந்த 116 வகுப்பு கலவரங்களில் கொல்லபப்ட்டவர்கள் 564 பேர். குறிப்பாக பாபர் மசூதி உள்ள இடத்தில் மட்டும் இறந்தவர்கள் 224 பேர்.

பாபர் மசூதி இடத்தை பிறகு டெல்லி , மும்பை , ஹைதராபாத் , ஜெய்ப்பூர் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் இறந்தவர்கள் 233 பேர் . அதில் மஹாராஷ்டிராவில் கொல்லப்பட்டோர் 68 பேர்.

பி வீ.நரசிம்ம ராவ்:
இது முன் திட்டமிட்டு நடந்த தாக்குதல் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மீண்டும் அதே இடத்தில் 100 நாட்களுக்குள் மசூதியைக் கட்டித்தருவோம் என அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் அறிவித்தார்.

கி.பி.1992 – டிசம்பர் 16 அன்று பாபர் மசூதி இடிப்பிற்க்கு யார் காரணம் என்று கண்டறிய நீதிபதி -லிபர்ஹான் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.

கி.பி.1993 – சுதந்திரத்திற்கு முன்பு 1947 வரை எவையெல்லாம் யாருடைய வழிபாட்டுத் தலங்களாக இருந்தனவோ அவை அப்படியே தொடரும் என்று புதிய சட்டம் இயற்றப்பட்டது.

1996 ஆம் ஆண்டு மாநில உயர்நீதிமன்றம் அனைத்து சிவில் வழக்குகளையும் இணைத்து ஒரே வழக்காக மாற்றியது.

2002 – பிப்ரவரி மாதம் பாபர் மசூதி நிலத்திற்கு அருகில் பெருமளவில் கூட்டம் திரட்டப்பட்டு மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பிறகு பிரச்சினைத் தொடங்கப்பட்டது. மார்ச் 15 அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி நிலத்தில் கோயில் கட்டும் பணித் தொடங்கும் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவித்தது.

2002 – பிப்ரவரி 27 அன்று குஜராத்தில், கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து மதக்கலவரம் வெடித்தது. பத்திரிகைகளின் கூற்றுப்படி,3000 மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள்.

ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர் . பல்லாயிரம் கோடி மதிப்பிலான முஸ்லீம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

2002 – ஏப்ரல் மாதம் மூன்று நீதிபதிகள் கொண்ட அலஹாபாத் உயர்நீதி மன்றக் குழு, பாபர் மசூதி நிலம் யாருக்குச் சொந்தம் என்ற விசாரணையைத்
தொடங்கியது.

2003 – பாபர் மசூதி இடத்தில் கோயில் இருந்ததா? என்று ஆய்வு செய் யதொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2009 – லிபர்ஹான்ஆணையம் 16 வருடங்கள் விசாரணைக்குப் பிறகு, பாபர் மசூதி இடிப்பில் அத்வானி, அசோக் சிங்கால், உமாபாரதி, உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோரை குற்றவாளிகள் என அறிவித்தது.

2010 – செப்டம்பர் 30. 61 வருடங்களாக நடைபெற்ற பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம், சட்டப்படி அல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் 8000 பக்கங்களைக் கொண்ட ஒரு சர்ச்சைக்குரியத் தீர்ப்பை வழங்கியது. அதாவது வாக்கெடுப்பின் அடிப்படையில் நிலம் பிரிக்க தடைவிதித்தது .

அதன் தீர்ப்பானது ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இவ்விடத்தில் பங்கு கொடுக்கப்படுவார்கள். சர்ச்சைக்குரிய இடம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. இரண்டு பகுதி ஹிந்துக்களுக்கும் ஒரு பகுதி முஸ்லிம்களுக்கும் என்று பிரிக்கப்பட்டது.

இரு சமூகத்தினரும் இந்தத் தீர்ப்பை ஏற்று கொள்ளவில்லை.சில மாதங்களில் அதனால் தீர்ப்பை எதிர்த்து இவ்வழக்கை
உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

2011 ஆம் ஆண்டு உயர்நீதி மன்றத்தின் முடிவுக்கு
உச்சநீதிமன்றம் நிலத்தை பிரித்துக் கொடுக்க இடைக்காலத் தடை விதித்தது.

2016 ஆம் ஆண்டு அயோத்தி நிலத்தில் ராமர் கோவில் கட்ட சுப்ரமணியன் சுவாமி மனுத் தாக்கல் செய்கின்றார்.

2017 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாள் தலைமை நீதிமன்றம்
இவ்வாறு அறிவித்தது:-

பாபர் மசூதிப் பிரச்சனை மிகவும் சிக்கலானது. அதனால் இதை நீதிமன்றத்திற்கு வெளியில் தான் தீர்க்க வேண்டும் என்று உத்தர விட்டது. உரிமை கோரியவர்களை சுமுகமான வழியைத் தேட ஊக்குவித்தது.

இந்நிகழ்வுக்கு முன்னதாக நீதிமன்றம் வேறொரு வழக்கையும் விசாரித்துக் கொண்டிருந்தது.மசூதியில் தாக்குதல் ஏற்படக் காரணமாய் இருந்தவர்களின் வழக்கு அது.

ஏப்ரல் 2017 ஆம் ஆண்டு தலைமை நீதிமன்றம்,
BJP யின் மூத்த அரசியல் தலைவர்களை பாபரி மசூதி இடிப்பிற்கான குற்றத்தில் சதி செய்தவர்கள் பற்றி விசாரணை செய்தது.அதில் முன்னாள் துணை பிரதம மந்திரியான அத்வானி அடங்குவார்.25 வருடங்களுக்கு முன்பு சதி செய்து மசூதியை இடித்ததற்கான வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.ஆனால் இவ்வழக்கின் தீர்ப்பு 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு பாபர் மசூதி வழக்கை முடிவுக்கு கொண்டுவர ஐவர் அணி நியமிக்கப்பட்டது.

இதிலிருந்து நீதிபதி ரமணா மற்றும் நீதிபதி லலித் அவர்கள் விலகுகிறார்கள். இதனால் விசாரணை கால தாமதம் ஆனது. அதனால் மூவர் கொண்ட குழு விசாரணையைத் துவங்கியதில்,

பாபர் மசூதியில் ராமர் பிறந்தார் என்பதற்கான ஆதாரம் கேட்கப்பட்டது.

நிர்மோகி அகோராவிடம் நிலத்தை எந்த அடிப்படையில் உரிமை கோருகிறீர்கள் என்றும் விசாரிக்கப்பட்டது.

2010- தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீா் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் உச்சநீதிமன்றம் வாதங்களைக் கேட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 16 ம் நாள் அனைத்து விசாரணையும் முடிக்கப்பட்டு நவம்பர் மாதம் தீர்ப்பு முஸ்லிம்களுக்கும் நீதிக்கும் எதிராக வெளியானது

அரசியல்:
இந்தியாவில் ஹிந்து தேசியவாத இயக்கங்களுக்கு,

ராமர் கோயில் பிரச்சனை இதயமாக விளங்கிகிறது.
1984 ஆம் ஆண்டு பிஜேபி கட்சியான தற்போதைய இந்திய அரசு, பாராளுமன்றத்தின் கீழ் சபையில் வெறும் இரண்டு சீட்டுகளை
மட்டுமே வெற்றி பெற்றனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட நான்கு ஆண்டிற்குள் 161 சீட்டுகளை வென்றனர்.

ஆண்டுகள் பல கழித்து பி ஜெ பி பல மாநில மற்றும்
நாடு தழுவியத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
ராமர் கோவிலை அயோத்தியில் கட்டுவதற்கான வாக்குறுதி அவர்களுடைய அறிக்கையில் எப்பொழுதும் இருக்கும்.

டிசம்பர் 6 இந்திய முஸ்லிம்கள் கருப்பு தினமாக கருதுகின்றனர். சர்வதேச முஸ்லிம்கள் பலரும் மறந்தும் வருகின்றனர். ஆனால் ஹிந்து தேசியவாதிகள் அதை வெற்றி நாளாகக் கொண்டாடுகின்றனர்.

ஒரு முகலாய மசூதியை பிரச்சினையை லாவகவமாகக் கையாண்டு பிஜேபியினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்களா?என்ற கேள்வி எழாமல் இல்லை.

-அபூஷேக் முஹம்மத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *