தேர்தலில் வாக்களிப்பு நிறைவடைந்தது!
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
9 ஆவது பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமானது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே வாக்களிப்பு இடம்பெற்றது.
நாடளாவிய ரீதயில் 12 ஆயிரத்து 985 வாக்களிப்பு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பாதுகாப்பு கடமையில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார அதிகாரிகளும் இம்முறை தேர்தல் கடமைகளில் ஈடுபட்டனர்.
வாக்களிப்பு முடிவடைந்துள்ள நிலையில் வாக்குப்பெட்டிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச்செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
நாளை காலை 7 மணி முதல் வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகும். மாலை 4 மணிக்குள் முதலாவது முடிவு வெளிவரும் எனவும், நள்ளிரவுக்குள் இறுதி முடிவு வெளியாகும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.