நீண்ட நாள் காதலனை திருமணம் செய்தார் பின்லாந்து பிரதமர்!

கொரோனா பரவலுக்கு மத்தியில் தனது நீண்டநாள் காதலரான மார்கஸ் ரெய்கோனனை பின்லாந்து பிரதமர் சன்னா மெரின் திருமணம் செய்துகொண்டார்.
உலகை தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த பெண்மணிகளில் ஒருவராக தற்போதைய பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மெரின் இருந்து வருகிறார். உலகில் அரசியலுக்கு வந்து ஏழே ஆண்டுகளில் பிரதமரான, இளம் பெண் பிரதமர் என்ற சிறப்பையும் சன்னா மெரின் பெற்றுள்ளார். 34 வாயதாகும் சன்னா மெரின் தனது நீண்டகால காதலரும், கால்பந்தாட்ட வீரரும் ஆன மார்கஸ் ரெய்கோனுடன் 16 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

இந்த ஜோடிக்கு தற்போது எம்மா அமலியா மெரின் என்ற இரண்டு வயது மகள் உள்ளார். இந்நிலையில் தனது காதலரான மார்கஸ் ரெய்கோனனை பிரதமர் சன்னா மெரின் திருமணம் செய்துகொண்டுள்ளார். மெரினின் உத்தியோகபூர்வ இல்லமான கேசரந்தாவில் திருமணம் சனிக்கிழமை நடைபெற்றது. இது ஒரு நெருக்கமான விழாவாக இருந்தது, இதில் 40 விருந்தினர்கள் கலந்து கொண்டனர் – அனைவரும் நெருங்கிய நண்பர்கள் அல்லது குடும்பத்தினர்.

இது குறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நான் விரும்பும் மனிதனுடன் என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். நாங்கள் ஒன்றாக நிறைய பார்த்திருக்கிறோம், அனுபவித்திருக்கிறோம், சந்தோஷங்களையும் துக்கங்களையும் பகிர்ந்து கொண்டோம், ஆதரித்தோம்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது கணவருடன் திருமணம் செய்துகொண்டது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார். இதனிடையே பின்லாந்து பிரதமரின் திருமணத்திற்கு அந்நாட்டு மக்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *