அமெரிக்க ஜனாதிபதியின் மிக நெருங்கிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா!
அமெரிக்கா அதிபரான டொனால்ட் ட்ரம்பின் மிக நெருங்கிய அதிகாரியான ரொபட் ஓ பிரையன்க்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் உயர்மட்ட உதவியாளரும் ஆவார்.
சமீபத்தில் ஐரோப்பாவில் இருந்து நாடு திரும்பிய இவர் மனைவியுடன் சேர்ந்து இத்தாலி,இங்கிலாந்து, பிரான்ஸ்,ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளின் அதிகாரியை சந்தித்துள்ளார்.மேலும் கடந்த 10ம் திகதி, அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப்பையும் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.