இலங்கையில் 1800 மில்லியன் ரூபா பணப்பறிமாற்றம் செய்துள்ள வங்கிக் கணக்கு!
இலங்கையில் 1800 மில்லியன் ரூபாவு கொடுக்கல் வாங்கலுடன் பேணிவந்த வங்கி கணக்குக்கு சொந்தமான போதைப்பொருள் வலையமைப்பின் உறுப்பினர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு கிலோ 40 கிராம் ஹெரோயின் போதைப்பொருடன் கைது செய்யப்பட்டவர் வழங்கிய தகவலை அடுத்து இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்படும் போது அவரது கையில் இருந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணம் பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் போதை பொருள் விற்பனையாளர்களில் பிரதானியை கைது செய்ய முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போதைப்பொருள் வர்த்தக வலையமைப்பு கல்கிஸ்ஸ மற்றும் மொரட்டுவ பிரதேசத்தில் இருந்து முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த வலையமைப்பின் முக்கிய பிரதானி சிறைச்சலை கைதி என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்