இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் (25) மாத்திரம் 6 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் சென்னையில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கொரோனா தடுப்பு முகாமில் கண்காணிக்கப்பட்டவர்களாவர்.

வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 2 ஆயிரத்து 103 பேர் குணமடைந்துள்ளனர். 656 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 11 பேர் பலியாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *