இனத்தின் பெயரில் உள்ள கட்சிகளை தடை செய்ய வேண்டும்!

இனம் மற்றும் மதத்தின் பெயரில் அரசியல் கட்சிகளை பதிவுசெய்யும் செயற்பாட்டை புதிய அரசியலமைப்பின் ஊடாக தடைசெய்ய வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல்வீரவன்ஸ தெரிவித்தார்.” இன மற்றும் மதத்தின் பெயரில் கட்சிகளை பதிவுசெய்துக்கொண்டு அரசியல் நடத்துவது தவறான விடயமாகும். இதற்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தடைவிதிக்கப்பட வேண்டும் என்பதே எனது யோசனையாகும்.தேசிய நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றுக்கும் இது தடையாக இருக்கின்றது. எனவே, முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும் விடயங்கள் தடுத்துநிறுத்தப்படவேண்டும்.” – என்றும் விமல்வீரவன்ஸ கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *