இலங்கையர்களுக்கு டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்!

இனி வரும் காலங்களில், அனைத்து புதிய பிறப்புச் சான்றிதழ்களிலும் எந்தவொரு மதத்தையும் இனத்தையும் குறிப்பிடாது “இலங்கையர்” என்றே வழங்கப்பட உள்ளது என்று பதிவுத் துறை கூறுகிறது.

இலங்கையில் பிறப்பு பதிவு செய்வதற்கான விண்ணப்ப படிவத்திலிருந்து திருமணம் மற்றும் இனக்குழு தொடர்பான விவரங்களும் நீக்கப்படும் என்று பதிவாளர் ஜெனரல் என். சி. விதானகே மேலும் தெரிவித்தார்.

நாட்டில் பல குழந்தைகள் பெற்றோரின் திருமண விவரங்கள் காரணமாக பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள், குறிப்பாக ஒரு குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது.

2020 பொதுத் தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று விதானகே மேலும் தெரிவித்தார்.

புதிய முறையின் கீழ், அனைத்து புதிய பிறப்புச் சான்றிதழ்களுக்கும் 12 இலக்க வரிசை எண் வழங்கப்பட உள்ளது, மேலும் ஒரு குழந்தை 15 வயதை நிறைவு செய்யும் போது இந்த வரிசை எண்ணை அடையாள அட்டை பெற பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *