தலைவர் பதவியை ஏற்கப்போவதில்லை!மஹிந்த தெரிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை ஏற்கப்போவதில்லை என்ற முடிவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைவிடப்போவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து அப்பதவியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சுதந்திர கட்சியின் பலரும் இருந்து வருகின்றனர்.

எனினும் பொதுஜன முன்னணியின் தலைவர் பதவியில் தொடர மஹிந்த முடிவெடுத்துள்ளார் என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *