சீனாவில் மற்றுமோர் பேரிடர் 160 பேர் பலி!
கொரோனா பேரிழப்பிலிருந்து மெது மெதுவாக மீண்டெழுந்து கொண்டிருக்கும் சீனாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது!
இந்த அனர்த்தத்தில் இதுவரை சுமார் 160 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
வெள்ள அனர்த்தம் காரணமாக வீடுகள், வாகனங்கள், கட்டடங்கள் என ஏராளமான சொத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.