ஆலோசகர் குடும்பத்திற்கே கொரோனா 300 பேர் தனிமைப்படுத்தலில்!
அநுராதபுரம் – ராஜாங்கனயில் வசிக்கும் பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு மைய ஆலோசகர் மற்றும் அவரது இரு பிள்ளைகளுக்கும் கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி அவருடன் பழகிய 70 சிறுவர்கள் உட்பட 300 பேர் இதுவரை சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் தொற்றுக்கு உள்ளான 11 வயது சிறுமி சென்று வந்த கல்வி வகுப்புக்களில் கலந்து கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.