காலி – கொழும்பு வீதியை மூடிய கடல்நீர்!
காலி கொழும்பு பிரதான வீதியில் கடல் நீர் பெருக்கெடுத்ததினால் இன்று காலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
அம்பலங்கொடை கஹவ சந்தி தொடக்கம் தெல்வத்த வரை கடல் நீர் இவ்வாறு வீதியில் பெருக்கெடுத்தது.
அத்துடன் குறித்த பிரதான வீதியில் இரண்டு மீட்டர் வரை கடல் நீர் ஆக்கிரமித்ததாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.