ஆளுங்கட்சியால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறமுடியாது

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறமுடியாது – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.

” போர்முடிவடைந்த பின்னர் 2010 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதுகூட மஹிந்த தரப்பால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை மக்கள் வாக்குகள்மூலம் பெறமுடியாமல்போனது.

ஆனால், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களை விலைக்குவாங்கி, பெரும்பான்மையை உருவாக்கிக்கொண்டு 18 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தனர். இம்முறையும் ஆளுந்தரப்பால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறமுடியாது. தேர்தல் முடிவடைந்ததும் உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசியலே நடக்கும்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *