முன்னாள் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்கிறார்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை பொதுத்தேர்தலின் பின் இராஜினாமா செய்ய உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
களுத்துறை பிரதேசத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இதனை கூறினார்.
அத்துடன் சுதந்திர கட்சி தற்போது வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்