ஐம்பது கோடி ரூபா லஞ்சம் பெற்ற முன்னாள் அமைச்சர்?

கடந்த நல்லாட்சியில் மின்சக்தி அமைச்சராக இருந்த ஒருவர் சூரிய மின்சக்தி வேலைத்திட்டம் ஒன்றுக்கு அனுமதி வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் 50 கோடி ரூபா லஞ்சம் கேட்டார் என்று சிஐடிக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

கடந்த ஆட்சியில் மூன்று பேர் மின்சார துறை அமைச்சர்களாக கடமையாற்றியுள்ளனர்.இவர்களில் முக்கியமான ஒருவரே இந்தப் பெரிய தொகையை லஞ்சமாகப் பெற்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பி விசாரணையை மேற்கொள்வதற்கு சிஐடி தயாராகி வருகின்ற அதேவேளை,லஞ்ச ,ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை செய்வதற்கும் சிலர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இன்று இந்த முறைப்பாடுகள் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *