இலங்கையில் இன்று முதல் ஊரடங்கு நீக்கம்!
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த ஊரடங்கு சட்டம் இன்று (28) முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
‘கொரோனா’ வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 21 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் ஊரடங்கு உத்தரவு இலகுபடுத்தப்பட்டது.
கடைசியாக கடந்த 13 ஆம் திகதி முதல் நள்ளிரவு 12 மணி முதல் அதிகால 4 மணிவரை ஊரடங்கு அமுலில் இருந்தது. இந்நிலையிலேயே இன்று முதல் முழுமையாக நீக்கப்படவுள்ளது.