கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டும் அபாயம்!
கொரோனாவால் உலகளவில் 95,33,440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,85,160 பேர் உயிரிழந்துள்ளனர். வேகமாக பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்த வாரத்திற்குள் ஒரு கோடியை எட்டக் கூடும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.