இலங்கையில் திடீரென அதிகரித்த கொரோனா!
இலங்கையில் இன்று (23) இதுவரை 40 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,991 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 29 பேர் இந்தியாவிலிருந்தும், 11 பேர் அமெரிக்காவிலிருந்தும் அழைத்து வரப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 422 ஆக காணப்படுகிறது.
அத்துடன் 1,559 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.