இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது!
இலங்கையில் கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் நடந்த நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு பேசிய போது அவர் இதனை கூறினார்.