பரிசளிப்பு நிகழ்வில் பங்கேற்க வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி திரும்பி அனுப்பப்பட்டார்!
பொலன்னறுவையில் இன்று நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இடைநிடுவில் திரும்பி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழக்கும் நிகழ்வு பொலன்னறுவை பௌத்த மையத்தில் இன்று நடைபெற்றது.
இதில் மைத்திரியும் பங்கேற்றார். எனினும், இந்நிகழ்வானது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக அமைந்துள்ளது என தேர்தல் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்தே நிகழ்வை நிறுத்திவிட்டு மைத்திரிபால சிறிசேன வெளியேறிறுள்ளார்.