சஜித் பிரேமதாசவின் மற்றுமொரு வேட்பாளரும் விலகினார்!

சஜித்  பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின்  மற்றுமொரு வேட்பாளரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் களமிறங்கிய முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்கவே திடீரென பின்வாங்கியுள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும், காலி மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர் ஒருவரும் சில நாட்களுக்கு முன்னர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கினர்.

மங்கள சமரவீர மௌனம் காத்துவரும் நிலையில், காலி மாவட்ட வேட்பாளர் மொட்டு கட்சிபக்கம் தாவியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *