முன்னாள் அமைச்சர் ராஜித பிணையில் விடுதலை!
வெள்ளை வேன் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.