தேர்தலில் விலைபோகும் அரசியல்வாதிகளை விரட்டியடிப்போம்!
” மூன்றிலிரண்டு பெரும்பான்மை வெற்றியே அரசாங்கத்தின் இலக்காக இருக்கின்றது.அதனை ஒருபோதும் பெறமுடியாது. போர் முடிவடைந்தவேளையில்கூட அரசாங்கத்தால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை மக்கள் ஆதரவு மூலம் பெறமுடியாமல்போனது.
கொள்கையற்ற விலைபோகும் அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கியே மூன்றிலிரண்டு பலத்தை அப்போதைய அரசாங்கம் உருவாக்கிக்கொண்டது. எனவே, விலைபோகும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் இம்முறை வாக்களிக்ககூடாது.”
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.