தனியார் பிரத்தியோக வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி
தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஜுன் 29 ஆம் திகதி முதல் நடத்தமுடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி 100 மாணவர்களின் பங்குபற்றலுடன் வகுப்புகளை நடத்த முடியும்.
முன்னதாக ஜுன் 15 ஆம் திகதி முதல் தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிக்கலாம் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே திகதியில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.