இலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (09) இரவு 11.45 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1,858 இலிருந்து 1,859 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.நேற்றையதினம் (09) இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதோடு, 67 பேர் குணமடைந்துள்ளனர்.
அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 1,859 பேரில் தற்போது 791 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 1,057 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 11 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 74 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.